தளர்ந்த நடை
கலைந்த உடை
குழைந்த தலை முடி
முன் வரும் வாகனங்களின்
புகைக்கு போட்டியாக
சிகெரட் புகை, ,
ஏன் இந்த தளர்வு ?
ஏன் இந்த மௌனம்?
இனம் புரியாத கவலைகள்
குடிகொண்ட முகம் ,
பார்த்த கனம் தோன்றியது
எதாவது செய்ய வேண்டுமென்று ,
யார் என்று தெரியாது
என்ன கஷ்டம் என தெரியாது ,
அவனது தேவை அறியவில்லை ,
அங்கு எனது சேவை
அவன் பிடித்த சிகெரட்டை
நான் அடக்கம் செய்தேன்
என் இடக்காலால்..
No comments:
Post a Comment